Tuesday, September 24, 2019

சீரற்ற வானிலையால் 11387 குடும்பங்களை சேர்ந்த 45,091பேர் பாதிப்பு

சீரற்ற வானிலையால் காரணமாக 11387 குடும்பங்களை சேர்ந்த 45,091பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.கொழும்பு, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த நிலைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக பொலிஸார் அவசர உதவி தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய, 0112587229 மற்றும் 01122454576 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக, பொதுமக்கள் அனர்த்தங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க முடியும்.

இதேவேளை, விசேட பயிற்சிப்பெற்ற உயிர்காப்பு மற்றும் அனர்த்த உதவி பொலிஸ் அதிகாரிகள் 150 பேர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

50 பேர் கொண்டு மூன்று குழுவினராக இவர்கள் காலி மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அனர்த்த உதவிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொலிஸ் கடற்பிரிவுக்கு சொந்தமான 50 படகுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com