Thursday, August 22, 2019

சிறிதரனின் பம்மாத்து! 100 மீற்றறுக்கு அப்பாலுள்ள காணியில் தேடுதல் நடத்தியதால் தனது சிறப்புரிமை மீறப்பட்டு விட்டதாம்.

கிளிநொச்சி வட்டக்கச்சியில் புலிகளின் ஆயுதங்கள் புதைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இலக்கம் 885 ஆறுமுகம் வீதியில் அமைந்துள்ள கந்தையா குணரத்தினம் என்பவரின் காணியில் தேடுதல் மேற்கொள்வதற்கு கிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் வடக்கச்சி ஆறுமுகம் வீதியில் இலக்கம் 882 இல் தனது காணி உள்ளது எனவும் இதனால் இந்த தேடுதல் தனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என பாராளுமன்றத்தில் சிறிதரன் முழங்கியுள்ளார்.

கிளிநொச்சி வடக்கச்சி கிருஸ்ணர் ஆலயத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் ஆதாவது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் காணி அமைந்துள்ள இடத்திலிருந்து நூறு மீற்றர் தொலைவில் உள்ள கந்தையா குணரத்தினம் என்பவரது காணியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைகப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று 21-08-2019 காலை முதல் பொலீஸ், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து இத்தேடுதல் நடவடிக்கையின் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் இத்தோடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

புலிகளின் அனுதாப வாக்குகள் பெற்றுவந்தவர் சிறிதரன். ஆனால் அவரது செயற்பாடுகள் பலவும் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் இவ்வாறான தேடுதல்களை தானே வடிவமைத்து அல்லது எங்காவது இடம்பெறும் விடயங்களை தனது சீலைக்குள் இழுத்தெடுத்து வாக்குப்பிச்சைக்கு தயாராகி வருகின்றார் சிறிதரன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com