Monday, August 5, 2019

முஸ்லிம் பெண்களின் நிகாப் விடயத்தில் துணைபோகாதீர். முஸ்லிம் பா.உ ளை மிரட்டுகிறது பள்ளிவாயல்கள் சம்மேளனம்.

முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாபை தடை­செய்­வ­தற்கு சட்­ட­மொன்­றினை இயற்றிக் கொள்­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினை நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரளவினால் சமர்ப்­பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை விவாதங்களில் கலந்து கொள்வதிலிருந்து நரித்தனமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நழுவி வரும் நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைத்துள்ள கொழும்பு மற்றும் கண்டி பள்ளிவாயல்கள் சம்மேளனம் குறித்த சட்டத்திருத்தத்திற்கு துணை போகவேண்டம் என தமது பா.உ களை மிரட்டியுள்ளது.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்­களின் சம்­மே­ள­னங்கள் இணைந்து நேற்­றைய தினம் தெஹி­வளை ஜும்ஆ பள்­ளி­வாசலில் நடாத்­திய விசேட மாநாட்டில் மேற்படி மிரட்டலை மகஜர் வடிவில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கையளித்துள்ளனர்.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னங்கள் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்தக் கூட்­டத்­துக்கு நாடெங்­கி­லு­மி­ருந்து பள்­ளி­வா­சல்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி சுமார் 6000 பேர் கலந்­து­கொண்­டனர்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் உள்­ளிட்ட பிர­தி­நி­திகள், முஸ்லிம் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்­டனர். பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்­தினால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் மகஜர் ஒன்றும் கைய­ளிக்­கப்­பட்­டது.

முஸ்லிம் பெண்­களின் உரி­மை­யான நி­காபை தடை செய்­யக்­கூ­டாது. ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் அப்­பாவி முஸ்­லிம்கள் விரைவில் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும்.

எமது முன்­னைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் வடி­வ­மைத்துத் தரப்­பட்ட முஸ்­லிம்­களின் உரி­மைகள் தொடர்­பான சட்­டங்கள் தொடர்ந்தும் பாது­காக்­கப்­பட வேண்டும். இவற்றைப் பாது­காப்­பதை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது கட­மை­யாகக் கரு­த­வேண்டும் என்று அந்த மிரட்டல் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த அமைச்­சர்­க­ளான ரிசாத் பதி­யுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் உட்­பட ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நி­காபை தடை செய்­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மூலம் கொண்டு வரப்­பட்டால் அதனை எதிர்த்து வாக்­க­ளிப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தனர்.

நிகழ்வில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், இரா­ஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்­அலி, பிர­தி­ய­மைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், இம்ரான் மஹ்ரூப், முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் மற்றும் மேல்மாகாண அளுநர் எம்.ஜே.எம்.முஸம்மில், முன்னாள் ஆளுநர் அசாத்சாலி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இம்மாநாட்டில் குருநாகல் வைத்தியசாலையின் டாக்டர் ஷாபியும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாயல்கள் சம்மேளனங்கள் அரசியல்வாதிகளை அழைத்து தமது வகாப்வாத செயற்பாடுகளை திணிப்பது இந்நாட்டில் நிறுத்தப்படவேண்டும். இவ்வாறு பள்ளிவாயல்கள் சம்மேளனங்கள் அரசியல்வாதிகளை மிரட்டி மதவாதத்தின் பக்கம் தள்ளுவார்களானால் அது ஒட்டுமொத்த இலங்கைக்கும் ஆபத்தாக அமையும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com