Thursday, August 15, 2019

கோத்தாவுடன் ஒன்றிணைய பொன்சேக்காவுக்கு அழைப்பு... பார்ப்போம் என்றாராம் பொன்சேகா!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்தினார் என ஐக்கிய தேசியக் கட்சியின் களனிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மனோஜ் பெரேரா தெரிவித்தார்.

களனியிலுள்ள முக்கிய இடமொன்றில்பொன்சேக்கா இருந்தவேளையிலேயே கோத்தபாயாவினால் இவ்வழைப்பு ஏற்படுத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பழைய கோபங்களை மறந்து, தன்னுடன் ஒன்றிணையுமாறு கோத்தபாய ராஜபக்ஷ பொன்சேக்காவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோத்தபாயவின் அழைப்புக்கு பொன்சேக்கா பதிலளிக்கையில் உடனே அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல், 'பார்ப்போம்' எனக் கூறியதாகவும் உடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com