Tuesday, August 27, 2019

கைது செய்யப்பட்ட வைத்தியரின் தகவலுக்கு அமைய ஆயுதங்கள் மீட்பு!

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் (TID) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

AK 47 துப்பாக்கி, 120 தோட்டாக்கள், 11 கைக்குண்டுகள், PE10 என சந்தேகிக்கப்படும் 10 கிலோ வெடிமருந்து, தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை TID யினர் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சந்தேகநபரின் மூலம் பளை, பிரதேசத்தில் வைத்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலீஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இரவு பளை வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி வைத்தியர் சின்னையா சிவரூபன் கைது செய்யப்பட்டிருந்தார்.

3 பிள்ளைகளின் தந்தையான, 41 வயதான சிவரூபன் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, TID யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அவரது கைதை கண்டித்து, அவரை விடுதலை செய்யக் கோரியும் பளையில் கடந்த வெள்ளிக்கிழமை (23) ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்க்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com