Wednesday, August 7, 2019

தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி ஜகத் புஷ்பகுமாரவுக்கு....? ஹிஸ்புல்லாஹ்வுக்கும் வேண்டுமாம்..

குருணாகல் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்குப் பலரும் விண்ணப்பித்துள்ளமை தெரியவருகின்றது.

ஜகத் புஷ்பகுமார, எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், பிரஸங்க ஸோலங்காரச்சி, ஆறுமுகம் தொண்டமானின் கட்சி இதற்காக விண்ணப்பித்துள்ளமை பற்றியும் மேலும் தெரியவருகின்றது.

எதுஎவ்வாறாயினும், ஜகத் புஷ்ப குமார தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகத் தெரியவருகின்றது.

குருணாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் மறைவைத் தொடர்ந்து தேசியப் பட்டியல் உறுப்பினர் சாந்த பண்டார இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து குருணாகல் மாவட்ட உறுப்பினர் பதவிக்கு அவர் நியமிக்கப்படவுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com