Saturday, August 24, 2019

பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை அவசரகால சட்ட நீக்கத்தால் பாதிக்காது

அவசரகால சட்டத்தை நீக்குவதன் ஊடாக பயங்கரவாத அமைப்புகளின் தடைக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாது என தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து சில இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன.

அந்த வகையில் குறித்து அமைப்புக்கள் மீதான் தடையில் எவ்வித மாற்றமும் அவசரகால தடைச் சட்டத்தை நீக்கியதால் ஏற்ப்படாது என தேசிய ஊடக மையம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாத அமைப்புகளான தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாதே மிலாது இப்ராஹிம், விலயாத் ஹஸ் செயிலான் ஆகிய மூன்றும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com