Monday, August 12, 2019

11 பில்லியன் வஞ்சகம் செய்த கோத்தாவுக்கு ஜனாதிபதி வேட்பாளராக முடியாது....! - மங்கள

பாெதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் என மகிந்த ராஜபக்ஷ நேற்று (11) அறிவித்தார் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப, தனது சகோதரன் ஜனாதிபதியாக வருவதையே முன்னாள் ஜனாதிபதி விரும்புகின்றார் எனவும், அவரது மற்றொரு சகோதரன் சபாநாயகராக வர விரும்புகின்றார் எனவும்,இன்னுமொரு சகோதரன் பொருளாதாரத்துறையில் முன்னணி வகிக்க வேண்டும் எனவும் அவர் தனது முகப்புத்தகப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக தற்போது 11 பில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் வழக்கு இடம்பெற்று வருவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவோ அல்லது வேறொரு ராஜபக்ஷவோ அல்ல என்றும், அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ளவர் இலங்கையில் பிறந்து, இலங்கையிலிருந்து பயந்தோடிய ஒருவரல்லர். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனநாயக முறையில் தேர்வுசெய்யப்படவுள்ள ஒருவரே எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com