Thursday, July 18, 2019

பிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)

சொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவரும் வாகனத்தொடரணிகள் வீதி ஒழுங்குமுறைகளை உதாசீனம் செய்து பயணம்செய்வது யாவரும் அறிந்த விடயம்.

அந்தவகையில் இன்று கண்டிப்பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த அரசியல்வாதி ஒருவனின் வாகனத்தொடரணிக்கு வழிவிடாத வான்சாரதி ஒருவர் குறித்த அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகித்தரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

வாகனத்தை இடைமறித்த பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த சாரதியை தாறுமாறாக தாக்கியுள்ளதுடன் இதுகுறித்து சாரதி அவசர பொலிஸ் சேவைக்கு செய்த முறைப்பாடு தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை என தெரியவருகின்றது.

பாதுகாப்பு உத்தியோகித்தர் சாரதியை தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.




...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com