Monday, July 8, 2019

எமது காலத்தில் ஆகாயத்திலிருந்தும் குண்டு வீசப்பட்டது. ஆனாலும் மக்கள் அச்சம் கொள்ளவில்லை. மஹிந்தர்.

நாம் இந்நாட்டிலிருந்த யுத்தத்தை நிறைவு செய்து மக்களின் அச்சத்தை போக்கி பத்து வருடங்கள் நிறைவாவதற்கு முன்னர் மீண்டும் இந்நாட்டில் குண்டு வெடித்துள்ளது. அதன்காரணமாக மக்கள் தீவிரவாதத்தை எண்ணி பயந்து கொண்டு வாழ்வதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகல், வாரியபொல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ஆட்சிக்காலத்திலும் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றதாகவும் இருப்பினும் மக்கள் இவ்வாறு பயப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ள அவர் தமது காலத்தில் கொழும்பில் ஆகாயத்திலிருந்து குண்டுபோடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்:

இன்று நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத அரசாங்கமாகவே இந்த அரசாங்கம் இருக்கின்றது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதில் அர்த்தம் இல்லை என்பதே எமது நிலைப்பாடு என்றார் மஹிந்த ராஜபக்ச.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com