Monday, July 1, 2019

செல்வத்திற்காக சக உறுப்பினரை கொன்று சிறைசென்று மீண்டவர் செல்வத்தின் சமயலாளியாக!

தமிழீழ விடுதலை போராட்ட இயக்கங்களில் உட்படுகொலைகள் சர்வ சாதாரணமானவை. இயங்கங்களில் இணைந்து கொண்டவர்கள் தமது கொள்கைகளை பாதுகாப்பதற்கு பதிலாக தலைமையை பாதுகாக்க புறப்பட்டதன் விளைவாகவே இயக்க மோதல்களும் உட்கட்சி படுகொலைகளும் இடம்பெற்றது என்பது யாவரும் அறிந்த விடயம்.

அந்த வரிசையில் ரெலோ அமைப்பின் தலைவருக்காக சக உறுப்பினர் ஒருவரை கொலை செய்து பத்து வருடங்கள் விளக்கமறியலிருந்த நபர் ஒருவர் தற்போது பிணையில் விடுதலையாகி அவ்வியக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு கூலியாளாக வேலைபுரிவதாக அறியக்கிடைக்கின்றது.

இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதியில் புலிகளுக்கு எதிராக செயற்படுகின்றோம் என இலங்கை இராணுத்திடம் ஆயுதங்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்ட ரெலோ அமைப்பானது அக்காலப்பகுதியில் மக்களின் சொத்துக்களை சூறையாடிவந்ததுடன் செல்வம் அடைக்கலநாதன் தனது போதைப்பொருள் வியாபாரத்திற்கு இயக்க உறுப்பினர்களைப் பயன்படுத்தியதாகவும் வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் உண்டு.

அவ்வாறு போதைப்பொருள் மற்றும் மக்களிடம் பறிக்கப்பட்ட பணத்தினை பகிர்ந்து கொள்வதில் அமைப்பின் தலைமையுடன் முரண்படுகின்றவர்கள் செல்வம் அடைக்கலநாதனால் கொலைசெய்யப்பட்டுள்ளதாக அவ்வமைப்பிலிருந்து வெளியேறியோர் தெரிவிக்கின்றனர்.

செல்வம் அடைக்கலநாதனின் செயற்பாடுகளில் முரண்பட்டு வெளியேற முற்பட்ட றமேஸ் என்ற உறுப்பினரை செல்வத்தின் ஏவலின் பெயரில் கொலைபுரிந்த சீலன் என்ற கொலைஞனே இறுதியில் செல்வம் அடைக்கலநாதனின் சமையல்காரனாகவும் செல்வத்தின் உடுதுணிகள் தோய்கும் வேலைக்காரனாவும் மாற்றப்பட்டுள்ளதாக ரெலோவின் மூத்த உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியா கற்குழி பிரதேசத்தின் மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலையில் செல்வம் அடைக்கலநாதன் மாட்டுவதற்கு போதிய ஆதாரங்கள் இருந்தபோதும்இ அச்சந்தர்ப்பத்தில் தனக்கு படையினர் மற்றும் பொலிஸாருடனிருந்த உறவை பயன்படுத்தி செல்வம் தப்பித்துக்கொண்டதுடன் கொலையாளியான சீலன்; பத்து வருடங்கள் சிறையிலிருக்க நேரிட்டது.

குறித்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமானது புலிகளால் செல்வத்திற்கு வழங்கப்பட்டிருந்த 9 எம்எம் கைத்துப்பாக்கி என்று தெரியவருகின்றது. இத்துப்பாக்கியை தனக்கு செல்வம் அடைக்கலநாதனே தந்ததாக சீலன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தபோதும்இ பொலிஸார் செல்வம் அடைக்கலநாதனை குற்றவாளியாக இணைத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சுயலாபங்களுக்காக சக உறுப்பினர்களையே கொன்று கைகளில் இரத்தக் கறையுடன் உள்ள இவர்கள் இன்று சிங்கள அரசியல்வாதிகளின் சேவகர்களாக வெள்ளை உடையணிந்து வலம்வருகின்றனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com