Thursday, June 20, 2019

தெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி!

ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌலவி மொகமது ஸியலான் தாங்கள் இஸ்லாத்தை தழுவுகின்ற உண்மையான முஸ்லிம்கள் என்றும் இஸ்லாம் சமாதானத்தையே விரும்புவதாகவும் வன்முறையே ஒருபோதும் போதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அங்கு சாட்சியமளித்த அவர் :

சஹ்ரானது செயற்பாடுகள் தொடர்பாக 2013 மற்றுமஇ 2014ம் ஆண்டு காலப்பகுதியில் நாம் மொத்தமாக 11 முறைப்பாடுகளை செய்துள்ளோம்.

சஹ்ரானுடன் அரசியல்வாதிகள் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தமானது சூபி முஸ்லிம்களை ஓரம்கட்டக்கூடியதோர் அடிப்படைவாத ஒப்பந்தமாகும். அவ்வொப்பந்தத்திலே ஷாபி ஸாலி, ஷிப்லி பாருக், எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா, ஏஎல்எம் றூபி மற்றும் எம்எம் அப்துல் றஹ்மான் ஆகியோர் சஹ்ரானுடன் கையொப்பம் இட்டிருந்தனர்.

சஹ்ரான் இந்நாட்டிலுள்ள முஸ்லிம் அல்லாதவர்களை கொல்லவேண்டும் என மூன்று உரையாற்றியிருக்கின்றார். இது தொடர்பாக நாம் முறைப்பாடு ஒன்றை தயாரித்து இலங்கையில் ஜனாதிபதி, பிரதமர் , நீதித்துறை அமைச்சராக இருந்த விஜயதாஸ ராஜபக்ச , நீதிக்கும் சமாதனத்துக்குமான அமைச்சு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் இயக்குனர் நாலக டி சில்வா ஆகியோருக்கு அனுப்பிவைத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com