Thursday, June 6, 2019

நீதிபதியை மாற்றலாமா? நான் மாற்றினேன்! உச்ச நீதிமன்றில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வழக்கு தாக்கல்!

இனவாத கருத்துக்களுக்காக மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சுற்றுவட்டம் ஒன்றை உடைத்தல் மற்றும் ஈச்சமரம் ஒன்றை அகற்றுதல் தொடர்பான தீர்ப்பு ஒன்றுடன் உடன்படாத ஹிஸ்புல்லா அன்று தனது அமைச்சுப்பதவியை பயன்படுத்தி நீதிபதியை இடமாற்றிவிட்டு தனக்கு சாதகமாக தீர்ப்பு எழுதக்கூடிய நீதிபதி ஒருவரை கொண்டுவந்து „எழுதடா தீர்ப்பை எங்களுக்கு சாதமாக' என்று தெரிவித்த விடயம் தொடர்பாக அவருக்கு எதிராக இந்திரசிறி சேனாராத்தின என்ற மஹரகம பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் மக்களை மிகவும் பாதித்த குறித்த இனவாத கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கள்ள மௌனம் காத்துக்கொண்டு திரைமறைவில் ஹிஸ்புல்லாவுடன் உறவு கொண்டாடிவரும் நிலையில் இச்சம்பவத்துடன் எந்த தொடர்பும் அற்ற சட்டத்தரணி ஒருவர் இவ்வாறானதோர் வழக்கை பதிவு செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

1 comments :

Unknown June 6, 2019 at 4:36 PM  

நக்கினார் நாவிழந்தார்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com