Thursday, June 6, 2019

பாதுகாப்பு சபைக்கு ஜனாதிபதி என்னை அனுமதிக்க வில்லை. தெரிவுக்குழு முன்னிலையில் அழுகின்றார் பூஜித.

பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் கட்டாயவிடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, பாதுகாப்பு சபைக்கூட்டத்துக்கு தன்னை வரவேண்டாம் என ஜனாதிபதி கூறியதாக தெரிவித்துள்ளார்.

இன்று காலை தெரிவுக்குழு முன் ஆஜராகிய அவர்:

இடமாற்றம் தொடர்பான அலுவலொன்றுக்காக தான் ஒக்டோபர் 23 ஆம் திகதி பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் பங்கேற்றதாகவும், அதன்போது ஒக்டோபரிலிருந்து பாதுகாப்புச் சபை கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டாம் என தனக்கு வாய்மொழி மூல அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

அன்றைய, பாதுகாப்பு செயலாளராக இருந்த கபில வைத்தியரத்ன இந்த வாய்மொழி மூல அறிவுறுத்தலை வழங்கியதாகவும், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமையவே தான் இந்த அறிவிப்பை வழங்குவதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கூறியதாக பூஜித ஜெயசுந்தர இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பவேண்டுமா என கோரியபோது அதற்கான தேவை ஒன்று இல்லை என பாதுகாப்பு செயலாளர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்:




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com