Saturday, June 8, 2019

அசாத்சாலிக்கு தூதுவர் பதவியாம்!

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி நாடு ஒன்றுக்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்படவுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

ஈஸ்டர் தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் அசாத் சாலி உட்பட்ட சில அரசியல்வாதிகளுக்கும் நேரடியாக தொடர்பிருப்பதாகவும் அவர்களை பதவி விலக்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் மேற்கொண்ட உண்ணா விரதத்தின் விளைவாக அசாத் சாலி பதவியை ராஜனாமா மேற்கொள்ள நேரிட்டது.

இந்நிலையில் இவருக்கான மாற்று பதவி ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க முன்வந்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com