Sunday, June 23, 2019

சீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.

தென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தன்னிடம் பெருந்தொகை பணத்தை நபர் ஒருவர். மோசடி செய்தபின், மேற்படி அரசியல்வாதியின் உதவியை தான் நாடியதையடுத்தே , இவ்வருடம் பெப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தான் பாலியல் தொந்தரவுகளுக்கும் வல்லுறவுக்கும் ஆளானதாக ‘த மோர்னிங்’ பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

மேற்படி அரசியல்வாதி 16 வயதான மற்றொரு யுவதியை வல்லுறவுக்குட்படுத்திய மற்றொரு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும் அப்பத்தரிகை தெரிவித்துள்ளது.

ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட மேற்படி யுவதி, இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன், கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்துக்கும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் நியாயமான விசாரணை நடைபெறும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ‘த மோர்னிங்’ பத்திரிகையிடம் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேற்படி சீன யுவதி கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வந்துள்ளார். காலியில் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில். இலங்கையில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றுக்கொள்வதற்கும், உணவகமொன்றை ஆரம்பிப்பதற்கும் அவர் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், உணவகத்தை ஆரம்பிப்பதற்காக தன்னிடம் பெற்ற பெருந்தொகைப் பணத்தை விடுதி உரிமையாளர் தரமற்ற கட்டடமொன்றை பெற்று தன்னை ஏமாற்றிவிட்டதாக மேற்படி யுவதி தெரிவித்துள்ளார்.

‘ நான் பணத்தை திருப்பிக் கேட்டபோது, அவர் என்னை அச்சுறுத்தினார். நான் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தேன். எதுவும் நடக்காத நிலையில், எனக்கு பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

அப்போது உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் உதவியை நாடுமாறும். அரசியல்வாதியின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்குமாறும் அதனால் பாதுகாப்பு கிடைக்கும் எனவும் மேற்படி யுவதிக்கு அப்பகுதியிலுள்ள பெண்ணொருவர் ஆலோசனை கூறினார்.

அந்த அரசியல்வாதி. ஏற்கெனவே சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் பிணையில் விடுதலையானவர் என்பதை தான் அறிந்திருக்கவில்லை என மேற்படி சீன யுவதி தெரிவித்துள்ளார். சீன யுவதியின் பிரச்சினையைத் தீர்ப்பதாக அவர் உறுதியளித்தார். எனனும், பின்னர், தன்னிடம் பாலியல் சலுகைகளை கோரினார் என யுவதி தெரிவித்துள்ளார்.

‘ஆனால், முதல் நாள் இரவிலேயே, அரசியல்வாதி தனது ஊடக செயலாளருடன் எனது அறைக்கு வெளியே வந்தார். அரசியல்வாதி என்னை விரும்புவதாக அவரின் ஊடக செயலாளர் தெரிவித்தார். அவரால் பொலிஸாரையும் நீதித்துறையையும் கட்டுப்படுத்த முடியும் என என்னிடம் கூறப்பட்டது. அரசியல்வாதி என்னை முத்தமிட்டார். அச்சத்தினால் நான் பணிந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது சாரதியுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கு யுவதியை அரசியல்வாதி நிர்ப்பந்தித்ததாகவும், ஆனால் தான் மறுத்ததாகவும் யுவதி கூறியுள்ளார்.

பின்னர் தான் வேறு ஒரு இடத்தில் தங்குவதற்கு ஆரம்பித்ததாகவும், ஆனால், கடந்த பெப்ரவரி மாதம் தனது விசா தொடர்பாக, அரசியல்வாதியின் உதவியை நாடியதாகவும் அந்த யுவதி தெரிவிததுளளார்.

தனக்கு உதவியளிப்பதாக அரசியல்வாதி கூறினாலும், தன்னுடனும் தனது சாரதியுடனும் அந்தரங்க உறவைப் பேணுமாறு அவர் கோரினார், இல்லாவிட்டால் விசா விவகாரம் காரணமாக தான் நாடு கடத்தப்படுவார் என எச்சரிக்கப்பட்டதாகவும் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.

‘அச்சம் காரணமாக நான் சம்மதித்தேன். எனக்கு வேறு வழியில்லை, நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்’ என மேற்படி யுவதி தெரிவித்துள்ளார்.

பின்னர் கடந்த மார்ச் மாதம் தான் ஹொங்கொங்குச் சென்தாகவும், சில வாரங்களின் பின், மேற்படி உணவக கட்டடத்தை குத்தகைக்கு வழங்குவதற்காக இலங்கைக்கு வந்து மீண்டும் ஹொங்கொங் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் இலங்கைக்குத் திரும்பி வந்தபின்னர், குறைந்தபட்சம் இரு தடவைகள் மேற்படி அரசியல்வாதியும் அவரின் சாரதியும் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக அந்த யுவதி தெரிவித்துள்ளார்.

இறுதியாக ஏப்ரல் 30 ஆம் திகதி தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாகவும், ஒரு சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பாக தனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என தனது சாரதியுடன் தன்னை வல்லுறவுக்குட்படுத்துவதற்கு முதல், மேற்படி அரசியல்வாதி தன்னிடம் கூறியதாகவும் மேற்படி யுவதி தெரிவித்தார் என ‘த மோர்னிங்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேற்படி அரசியல்வாதி மீண்டும் கைது செய்யப்பட்டால் முந்தைய வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட பிணை இரத்துச் செய்யப்படக்கூடும என்பதால், கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு அரசியல்வாதி முயற்சிக்கிறார் என சீன யுவதியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மேற்படி சீன யுவதியிடமிருந்து முறைப்பாடு கிடைத்ததாக காலி பொலிஸின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com