Friday, June 28, 2019

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை கோலாகலமாகத் திறந்துவைப்பு !

கதிர்காமம் ஆடிவேல் விழாவையொட்டிய இவ்வருடத்திற்கான காட்டுப்பாதை நேற்று(27) வியாழக்கிழமை காலை கோலாகலமாக இடம்பெற்றது. முன்னதாக உகந்தமலை முருகனாலயத்தில் விசேடபூஜை நடைபெறற்றது. ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் அருளாசி வழங்கினார்.

இன்று முதல்நாள் சுமார் 2ஆயிரம் யாத்திரிகர்கள் காட்டுக்குள் பிரவேசித்தனர் இம்முறை விசேடமாக இந்துகலாசார அமைச்சர் மனோகணேசன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் அம்பாறை மாவட்ட பாரரளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் கண்டி மாவட்ட பாரர்ளுமனற் உறுப்பினபர் அ.வேலுகுமார் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில்அம்பாறை அரச அதிபர் டி.எம்.எல்.திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு உயரதிகாரிகள் ஆகியோரும் பங்குபற்றினர்.

இம்முறை ஆடிவேல்விழா எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று உகந்தமலை முருகனாயல ஆடிவேல்விழாவும் இதோலத்தில் நடைபெறும்.

கதிர்காமத்திற்கு செல்லும் குமண யால சரணாலய காட்டுப்பாதை நேற்று காலை 27 ஆம் திகதி திறக்கப்படட்டது. தொடர்ந்து 13 தினங்கள் திறந்திருக்கும் இக் காட்டுப் பாதையானது ஜூலை 09 ஆம் திகதி மாலை 3 மணியுடன் மூடப்படவுள்ளது.

இதற்கமைய 13 தினங்கள் மாத்திரம் காட்டுப்பாதையூடாக அடியவர்கள் பாதயாத்திரை மேற்கொள்ள முடியும்.

தற்போது வடக்கு கிழக்கிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் அடியார்கள் உகந்தமலை முருகனாலயத்தை வாந்தடைந்துள்ளனர். மேலும் பல அடியார்கள் அம்பாறை மாவட்டத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

முதற்கட்ட பாதயாத்திரைக் குழுவினர் அனைவரும் நேற்று 26 ஆம் திகதி உகந்தை மலை முருகன் ஆலயத்தை வந்தடைந்ததாக ஆலயத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார். சுமார் 2000பக்தர்கள் ஆலயத்தில் குழுமிஇருப்பதாகச் சொன்னார்.

இம்முறை காட்டுப்பாதையூடாக பயணிக்கும் பக்தர்களின் நலன்கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளும் காடுகளில் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கை யில் படையினர் மற்றும் பிரதேச சபைகள் ஈடுபட்டுள்ளன.

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையானது தினமும் 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 3 மணியுடன் மூடப்படவுள்ளது. அடியார்களின் பாதுகாப்பு கருதி காடுகளுக்குள் தனியாக உட்பிரவேசிப்பதற்கு இம்முறை அனுமதிக்கப்படமாட்டார்கள். குழுக்களாகவே காட் டுக்குள் செல்ல அனுதிக்கப்படுவார்கள்.

அனைவரும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையினை எடுத்துவரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காரைதீவு நிருபர் சகா-.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com