Sunday, May 5, 2019

ஞானசார தேரரை எதிர்வரும் வெசாக் பண்டிகைகளுக்கு முன்னர் விடுவிக்கவேண்டுமாம். விஜயதாஸ ராஜபக்ச

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக தொடர்ச்சியாக எச்சரித்து வந்தவர் ஞானசார தேரர். அவர் அவ்வாறு பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தபோது, அது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து என ஓரம்கட்டப்பட்டது.

ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் குற்றவாளியாக காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்யவேண்டும் என பல பௌத்த அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அவரை ஜனாதிபதி பொதுமன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச வேண்டுதல் விடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது:

பயங்கரவாத செயற்பாடுகளுக்கான அரசியல் பலம் 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த அரசியல் பலத்தை தற்போது தடுத்த நிறுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. 30 வருடக்கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றமாக இன்னுமொரு சட்டத்தை நிறைவேற்ற இடமளிக்க முடியாது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் நிறைவேற்றப்படக் கூடாது. அதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதுடன் மக்களை அணித்திரட்டியாவது புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை தடுத்து நிறுத்துவோம்.
ரிஷாத் பதியுதீன், அசாத் சாலி , ஹிஸ்புல்லாஹ் மற்றும் முஜிபுர் ரஹ்மான் போன்றோரின் ஒத்துழைப்பின்றி இந்த பயங்கரவாதிகளினால் செயற்பட்டிருக்க முடியாது . இவர்கள் அனைவரும் பிரதமரின் பாதுகாப்பில் உள்ளதால் நடவடிக்கை எடுக்கவும் முடியவில்லை .

மேலும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடாடிய கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆகவே எதிர்வரும் வெசாக் தினத்துக்கு முன்னதாக ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேணடும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com