Monday, May 6, 2019

சஹ்ரானின் மனைவி தொடர்பில் கற்பனையில் கதை எழுதும் ஊடகங்கள்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் மாஸ்டர்மைன்ட என்று சொல்லப்படுகின்ற சஹ்ரானின் மனைவி கடந்த 26ம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிலிருந்து உயிர்தப்பி அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் அவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியதாக ஊடகங்கள் முண்டியடித்துக்கொண்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

இச்செய்திகளின் உண்மைத் தன்மை தொடர்பில் இலங்கைநெட் விசாரணைகளின் முன்னணியில் நிற்கும் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, அச்செய்திகள் யாவும் பொய்யானவை என்றும், சஹ்ரானின் மனைவியான பாத்திமாவிடமிருந்து எந்த தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் காது கேட்கவில்லை என நாடகமாடி வருவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு நிலைமைகள் இருக்கின்றபோது, ஊடகங்கள் கற்பனையில் கதையெழுதி மக்களை தவறாக வழிநடாத்துவதை நிறுத்திக்கொள்வது சிறந்ததாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com