Saturday, April 27, 2019

சாய்ந்தமருதில் வெடித்துச் சிதறிய பயங்கரவாதிகளின் இறுதி ஆசை மனைவி மாரை சுவர்க்கத்தில் சந்திப்பதாம். வீடியோ வெளியானது.

இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீடொன்றை நேற்று விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர். சாய்ந்தமருது வொலிவோரிய சுனாமி வீட்டுத்திட்டத்தில் உருவான குறித்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த குறித்த பயங்கரவாதிகள் படையினரால் சுற்றிவளைக்குப்பட்டதை தொடர்ந்து தங்களது உடல்களில் தற்கொலை அங்கிகளை அணிந்தவாறு துப்பாக்கி பிரயோகித்தை மேற்கொண்டிருந்தனர் என்பது யாவரும் அறிந்தது.

இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டபோது குறித்த வீட்டினுள் தங்கள் மனைவியர் குழந்தைகளுடன் இருந்தவாறே இந்ந வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அங்கே எந்த குற்றமும் செய்யாத பச்சைக்குழந்தை ஒன்று பயங்கரவாதி ஒருவனின் மடியிலிருந்தவாறு அவனது கையிலுள்ள ரி56 துப்பாக்கியை தொட்டு விளையாடும் காட்சி மனதை உறுக்குவதுடன் அவர்களது மனைவியர் பின்னாலிருந்து அழுவதையும் கேட்க முடிகின்றது.

இவர்களின் ஒருவனின் கையிலுள்ள நான்கு விரல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com