Tuesday, April 30, 2019

கொழும்பின் பாதுகாப்புக்கு கூட்டு நடவடிக்கைகள் கட்டளை மையம்.

முப்படைகள் மற்றும் காவற்படையை இணைந்ததோர் கூட்டு கட்டளை மையம் ஒன்று கொழும்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டளை மையத்தின் கீழ் மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள அனைத்து இராணுவ, கடற்படை, விமானப்படை, மற்றும் காவல்துறை பிரதேசங்களும், உடனடியாக கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகம், மேற்கு படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் மையத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடற்படையின் றியர் அட்மிரல் டபிள்யூஏஎஸ்எஸ் பெரேரா, விமானப்படையின் எயர் வைஸ் மார்ஷல் டபிள்யூஎல்ஆர்பி றொட்றிகோ, காவல்துறையின் கண்காணிப்பாளர் அனில் பிரியந்த ஆகியோர், இந்த நடவடிக்கைப் கட்டளை மையத்தின் இணைப்பதிகாரிகளாக பணியாற்றுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த இணைப்பதிகாரிகளில் ஒருவர் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த பயணித்த ஹெலிப்கொப்டர் இயந்திரக்கோளாறு காரணமாக புலிகளின் பகுதியினுள் தரையிறங்கியபோது எவருக்கும் சேதம் ஏற்படாமல் பயணித்தவர்கள் அனைவரையும் காட்டுவழியாக வவுனியாவுக்கு கொண்டுவந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் கீழ் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இந்த கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் பணியகம் செயற்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com