Monday, April 29, 2019

எமது பாதுகாப்பை நாங்கள் கவனித்துக்கொள்வோம். நீங்கள் பொத்திக்கொண்டிருங்கள். இந்தியாவிற்கு மஹிந்த கன்னத்தில்.. !

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து மேற்குலகும் இந்தியாவும் இலங்கையினுள் நுழைவதற்கான பாதையாக இத்தாக்குதல்களை பயன்படுத்திக்கொண்டுள்ள முனைகின்றது.

அந்த வரிசையில் அமெரிக்க எப்பிஐ மற்றும் சில புலனாய்வு நிறுவனங்கள் ஊடுருவின. அத்துடன் சிறிலங்காவுக்கு உதவி தேவைப்பட்டால், சிறப்பு படையான தேசிய காவல்படையை அனுப்புவதற்கு தயார் நிலையில் இந்தியா இருப்பதாக இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இவ்விடயத்தினை அந்த அதிகாரி இந்திய சிஎன்என்-நியூஸ்18 செய்திசேவைக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த அதிகாரியின் உதவி முன்மொழிவு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிட் அந்த தொலைக்காட்சி கேட்டபோது,

சிறிலங்காவில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எமது படையினரிடம் போதிய திறன் இருக்கின்றது உங்கள் உதவி எங்களுக்கு தேவையில்லை என கன்னத்தில் அறைந்தாற்போல் பதில் சொல்லியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்துரைக்கையில் :

'இந்த சதித் திட்டம் பற்றி முன்கூட்டியே தகவல்களை அளித்து இந்தியா உதவியிருக்கிறது.

ஆனால், தேசிய காவல் படை இங்கு வரத் தேவையில்லை. எமக்கு வெளிநாட்டுப் படையினர் உதவி தேவைப்படவில்லை.

இதனைக் கையாளும் திறன் எமது படையினருக்கு உள்ளது. அவர்களுக்கு தேவையான அதிகாரத்தையும், சுதந்திரத்தையுமே கொடுக்க வேண்டியிருக்கிறது.' என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com