Friday, April 19, 2019

அப்பன் தமிழ் தேசியம் பேசுகையில், மகன் சிங்களத்துடன் இணைந்து வவுனியாவில் இரவு களியாட்ட விடுதி ஆரம்பம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைகள் தற்போது தமது வாரிசுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்து கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஏழை மக்களின் குழந்தைகளை புலிகள் போரில் அழித்துக்கொண்டிருக்கும்போது, அவ்வியக்கத்தினை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்று பாராளுமன்று சென்ற ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனது மகனை லண்டனுக்கு மேற்படிப்புக்கு அனுப்பி வைத்தார். இருந்தாலும் அவன் அங்கு கஞ்சா போதைக்கு அடிமையாகியிருந்த நிலையில் நாடு திரும்பியுள்ளான்.

இலங்கையில் ஏழை மக்களின் குழந்தைகளை புலிகள் போரில் அழித்துக்கொண்டிருக்கும்போது, அவ்வியக்கத்தினை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்று பாராளுமன்று சென்ற ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனது மகனை லண்டனுக்கு அனுப்பிமேற்படிப்புக்களை கொடுத்தார்.

தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தொழில் ஒன்றை புரிவதற்கு அடிப்படைக் கல்வி கூட இல்லாத நிலையில் வடகிழக்கு தமிழ் இளைஞர் யுவதிகள் திண்டாடுகையில் - லண்டன் சீமையிலிருந்து திரும்பியுள்ள செல்வம் அடைக்கலநாதனின் மகன் பிஎம்டபில்யு சொகுசுக்காரில் வன்னியெங்கும் தூள் எழுப்புகின்றார்.

வவுனியாவில் எம்பாயர் ஹோட்டலை 8 கோடி ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ள அவர் வவுனியாவில் லண்டன் பாணியில் இரவு களியாட்ட விடுதி திறந்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது. செல்வம் தமிழ் மக்களுக்கு உணர்சி பொங்க பேசுகின்றபோது, மக்கள் அவரது மகன் களியாட்ட விடுதி என்ன விபச்சார விடுதியைத்திறந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மந்த மனநிலையிலேயே உள்ளனர். அவர்கள் செல்வத்திற்கு இப்பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியைக்கூட கேட்கமாட்டார்கள்.

லண்டனிலிருந்து வந்து வவுனியாவில் நட்சத்திர ஹோட்டலுக்கும் இரவு களியாட்ட விடுதிக்கும் 8 கோடியை முதலிட்டு 20 பேருக்கு தொழில்வழங்கியுள்ள செல்வத்தின் மகன் அந்த பணத்தை கொண்டு பண்ணை ஒன்றை அமைத்திருந்தால் எத்தனை நூறு பேருக்கு தொழில் வழங்கியிருக்கலாம் என்ற கேள்வியையும் கேட்கமாட்டார்கள்..

வடகிழக்கில் சிங்கள விரோதம் பேசுகின்ற தமிழ் தலைவர்கள் கொழும்பில் சிங்கள அரசியல் தலைவர்களுடன் எவ்வாறான உறவில் உள்ளனர் என்பதை இப்படம் உணர்த்துகின்றது. மஹிந்த தரப்பின் முக்கியஸ்தரும் இலங்கை அரசியலில் சர்ச்கைக்குரிய பெரும்புள்ளியுமாகிய திலங்க சுமதிபாலவுடன் படத்தில் இருப்பவர்தான் செல்வத்தின் மகன்.

இலங்கை கிரிக்கட் சபையின் தலைவரான சுமதிபால பல்வேறு விதமான வியாபாரங்களில் ஈடுபட்டுவருபவர். அவரின் வியாபார பங்காளியாக இணைவதற்கே இச்சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கைநெட் அறிந்து கொள்கின்றது.

தமிழ் மக்கள் சிங்கள தலைவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் உடனடியாகவே துரோகிப்பட்டமளித்து கௌரவிக்கின்ற தமிழ் தலைவர்கள் தங்களுடைய வாரிசுகளை சிங்கள தலைவர்களின் நிழல்களிலே வழர்க்கின்றனர். இவர்கள் வெளிநாடுகளிலும் சிங்களத் தலைவர்களின் பிள்ளைகளுடன் ஒன்றாகவே வாழ்கின்றனர். அவர்கள் யாவரும் ஒரே அடுக்கினை சேர்ந்தவர்கள்.

ஆனால் உழைக்கும் தமிழ் மக்களை தமிழ் எனும் இனவெறிப்போதையை ஏற்றி அந்த மயக்கத்தில் அம்மக்களை மூழ்கடித்துவிட்டு தங்களது வாரிசுகளை வாழ்வின் உச்சத்திற்கே கொண்டு செல்கின்றனர் என்பதை எடுத்துச் சொல்வதற்காகவே இப்படம் இங்கு தரவேற்றப்பட்டது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com