Saturday, April 13, 2019

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த புலி உறுப்பினருக்கு எதிராக ஜேர்மனி குற்றப்பத்திரிகை தாக்கல்.

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட 15 படை வீரர்களின் கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்திற்குரிய நபர் மீது ஜேர்மன் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜேர்மன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிவதீபன் என்ற நபரே இவ்வாறு நீதிமன்றில் நிறுத்தப்படுகின்றார்.

இவர் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினர், இரண்டு கொலை வழக்குகள் மற்றும் 11 கொலை முயற்சிகள் என்ற குற்றசாட்டுக்களை எதிர் கொள்கின்றார்.

இலங்கையில் 2008 ல் சிறைப்பிடிக்கப்பட்ட 15 படையினரை கொலைக்களத்திற்கு கொண்டுசெல்கையில் அதற்கு பாதுகாப்பு வழங்கியமை, சுட்டுக்கொல்லப்பட்ட உடலங்களை எரிப்பதற்கு பங்களிப்பு வழங்கியமை என்ற குற்றங்களை வழக்குத் தொடுநர்கள் சுமத்தியுள்ளனர்.

மேலும் சிவதீபன் 13 படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள வழக்கு தொடுநர்கள் இரு கொலை மற்றும் 11 உயிர்களை கொலை செய்ய முயற்சித்தமைக்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குறித்த நபர் எவ்வாறு ஜேர்மனியில் கைதானார் என்பது தொடர்பாக ஜேர்மன் பொலிஸார் இதுவரை உத்தியோகபூர்வ அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லை. இது தொடர்பாக இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடமும் தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை எனத் தெரியவருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்காக சர்வதேச விசாரணைகளை வேண்டிய புலம்பெயர் புலிப்பினாமிகள் தற்போது இது தொடர்பில் மௌனம் காத்து வருகின்றனர். வெறும் அறிக்கைகளுக்காக போர்குற்றம், சர்வதேச விசாரணைகள் என்ற கோஷங்களை கையிலெடுத்த புலம்பெயர் புலிப்பணப்பினாமிகள் தற்போது தாங்கள் வெட்டிய குழியில் எஞ்சியுள்ள புலிகளை போட்டு புதைக்கவுள்ளனர் என இலங்கைநெட் நம்புகின்றது.

இதேநேரம் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வித பிரத்தியேக குற்றச்சாட்டுக்களும் இன்றி தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளமையானது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதன்பொருட்டு புலம்பெயர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என கைதுகள் தொடருமாயின் பலரின் நிலை மற்றும் அவர்களது இருப்பு கேள்விக்குள்ளாகலாம் என நம்பப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் எந்த தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்த்தவர்கள் என்பது இதுவரை வெளியாகவில்லை. அது புலிகள் அமைப்பாக இருந்தால் அதன் உறுப்பினர்களின் நிலைமை மோசமடையலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com