Friday, March 1, 2019

மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி இணக்கம் - MA சுமந்திரன்

தமிழர்கள் விடயங்களுக்கு தீர்வாக மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் MA சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையில் நேற்று, முக்கிய சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகம் ஒன்று MA சுமந்திரனை தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். நான்கு பேர் உள்ளடங்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குழு மாகாணங்களுக்கு எவ்வாறன அதிகாரங்களை வழங்குவது என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழித்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதனுடன் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாகவும் கருத்தாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கலந்துரையாடலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழித்தல் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் போன்றவற்றிற்கு பலரும் எதிர்ப்பை வெளியிட்டார்கள் எனவும் சுமந்திரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com