Thursday, March 14, 2019

முடங்கியது Facebook சேவை - பில்லியன் பயனாளர்கள் பாதிப்பு

சமூக வலைத்தளமான பேஸ்புக் (Facebook), மிகக் கடுமையான செயலிழப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது, இதுவரை பேஸ்புக் வரலாற்றில் பதிவான பெரியளவிலான செயலிழப்பு என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, பேஸ்புக்கின் பிரதான செயலிகளான வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகியனவும் செயலிழந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. எவ்வாறான போதிலும் வட்ஸ்அப் சேவை இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008ஆம் ஆண்டு, பேஸ்புக்கில் இவ்வாறானதொரு தடங்கல்நிலை ஏற்பட்டிருந்தமை பயனாளர்கள் அறிந்திருப்பார்கள். அந்தக் காலப்பகுதியில் பேஸ்புக்கை பயன்படுத்திய 150 மில்லியன் பயனாளர்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பேஸ்புக் பாவனையாளர்கள் ஒருநாளைக்கு 2.3 பில்லியனாக அதிகரித்து காணப்படுகிறார்கள்.

எவ்வாறான போதிலும் தற்போது ஏற்பட்டிருக்கும் செயலிழப்பிற்கான உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், பேஸ்புக்கின் செயலிழப்பை இயன்ற வரையில் விரைவாக சீர்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com