Sunday, March 17, 2019

சவேந்திர சில்வா உள்ளிட்ட 67 இராணுவ அதிகாரகளை கைது செய்ய உலக நாடுகள் ஆழுத்தம் கொடுக்க வேண்டுமாம். ஐ.நா ஆணையாளர்

இலங்கையில் இடம்பெற்ற முப்பது ஆண்டுகால யுத்தத்தில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறியுள்ளமைக்கான ஆதாரங்கள் உறுதியாகியுள்ளன.

இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு காரணமான இலங்கை இராணுவத்தின் அப்போதைய தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, ஜகத் டயஸ், பிரசன்ன சில்வா, சாகி கால்லகே, கமால் குணரத்ன, ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட 67 இராணுவ உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

இது குறித்து 17 நாடுகளுக்கு அவர் வலியுறுத்தல் விடுத்துள்ளார். அத்துடன் குறித்த நாடுகள், ஒன்றாக இணைந்து மேற்குறிப்பிட்டவர்களை கைது செய்ய, இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் கோரினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கை மீது முன்வைத்த பிரேரணையில் இது குறித்த விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் ஆணையாளரின் கோரிக்கையை ரஷ்யா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா முதலான நாடுகள் புறக்கணித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலில் இலங்கையின் யுத்த விதிமுறைகளை மீறிய அனைவரும், சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தகுந்த முறையில் விசாரிக்கப்பட வேண்டும். பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com