Sunday, March 10, 2019

மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியை முடிவுக்கு கொண்டுவந்தது நடப்பு அரசாங்கமே - இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும

மத்திய வங்கியில் இடம்பெற்று வந்த மோசடியை முடிவுக்கு கொண்டு வந்தது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே எனவும், ஆனாலும் எல்லோரது விமர்சனங்களுக்கும் இந்த அரசாங்கமே முகம் கொடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்டம் தொடர்பான இரண்டாம் கட்ட விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகள் மூலம் மத்திய வங்கியில் ஊழல் மோசடி இடம்பெற்று வந்துள்ளது என்பதை அறியக்கூடியதாக இருந்தது. மத்திய வங்கியில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் மோசடிகள் நேர்ந்துள்ளதாக விசாரணை அறிக்கைகள் கூறுகின்றன.

குறித்த மோசடிகளை அனைத்தும் மிகவும் சூட்சுமமான முறையில் நடைபெற்றுள்ளன. இந்த ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழல்வாதிகள் விசாரணை நடாத்த முடியாதவாறு சட்டத்திலுள்ள ஓட்டைகளில் நுழைந்து மறைந்துவிடுகின்றனர். எவ்வாறு இருப்பினும் எமது அரசாங்கத்திலும் மத்திய வங்கியில் மோசடி இடம்பெற்றதுதான். அதை நாம் முடிவுக்கு கொண்டு வந்தோம்.

அதன்பின்னர், 2016, 2017 , 2018 எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com