Wednesday, March 13, 2019

ராஜபக்சர்கள் அல்லாத ஒருவரை ஜனாதிபதி வேடபாளாராக ஏற்றுக்கொள்ளத் தயார்- பசில்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொது ஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளுக்குமிடையேயான உத்தியோக பூர்வ பேச்சுவார்த்தை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. இங்கு எதிர்வரும் தேர்தலை இருகட்சிகளும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக தீவிரமாகவும் இதய சுத்தியுடனும் பேசி இறுதி முடிவெடுக்க இரு கட்சிகளின் தலைமைப் பீடங்களும் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்தபொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபச்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முடிவெடுப்பார் என்றும் அவர் ராஜபச்சர்கள் அல்லாத ஒருவரை நிறுத்துவது என்று தீர்மானித்தாலும் அதற்கு தங்களது பூரண ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் கோட்டபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோது, கோட்டபாய ராஜபக்ச தானாக முன்வந்து தயார் என்று கூறியிருப்பது வரவேற்க தக்கது என்றும் அவ்வாறு யாருக்காவது விருப்பம் இருந்தால் அவர்களும் வெளிப்படையாக கூறவேண்டும் என்றும் வேண்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com