Friday, March 15, 2019

எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் விரைவில், ஆளுங்கட்சிக்கு தாவுவார்கள் - அஜித் பீ. பெரேரா எதிர்வுகூறல்

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்றவர்கள், ஆளுங்கட்சியுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித்.பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய, பலமானதொரு கூட்டணியை ஸ்தாபிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவரும் நிலையில், அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்தரப்பினால் அமைக்கப்படும் புதிய கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி வலுவான கூட்டணியாக உருவாகும் என அஜித்.பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com