Wednesday, March 20, 2019

யுத்த குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின், அது குறித்த பதிலை வழங்க தயார் - சரத் பொன்சேகா

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த விதிமுறை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால், அதற்கு பதில் வழங்க தாம் தாயாராக உள்ளதாக, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் யுத்தத்தை அடுத்து உண்டான பிரச்சனைகளை உள்நாட்டு விசாரணைகளினூடாகவே முன்னெடுத்து சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் யுத்த செயற்பாடுகளை அப்போதைய ஜனாதிபதியாக செயல்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினர் தமது சொந்த சுய அரசியல் லாபத்திற்காகவே பயன்படுத்திக்கொண்டனர்.

இலங்கைக்கு சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவையற்ற ஒன்று என கூறிய சரத் பொன்சேகா , குற்றவாளிகள் மீதான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல் விடுத்தார்.

களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இதனை கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com