Tuesday, March 12, 2019

சர்வதேச நாடுகளிடம் ஒருபோதும் தலைகுனியவில்லை - ஐக்கிய தேசிய கட்சி

சர்வதேச சமூகத்திடம் இலங்கை ஒருபோதும் தலைகுனியவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதம் இடம்பெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியால் நாட்டில் ஒரு வரவு - செலவு திட்டம் இல்லாத நிர்வாகம் நடைபெற்று வந்தது.

எனினும் தற்போது அரச ஊழியர்கள் உள்ளிட்டவர்கள், நாட்டில் பல சலுகைகளுடன் நிம்மதியாக வாழ்கின்றனர்.

இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியை வெற்றி கொண்டு, ஐக்கிய தேசிய கட்சி, மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றது. இதன் காரணமாக இதுவரையிலும் ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை தலைகுனியவில்லை.

இலங்கை மக்களுக்கும் நாம் சிக்கலை ஏற்படுத்தவில்லை. அதேபோல் தான் இந்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்திலும் மக்களை ஏமாற்றாத பல்வேறு திட்டங்களை இந்த அரசாங்கம் முன்வைத்துள்ளது.

எனவே இந்த வரவு - செலவு திட்டத்தை தந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு மிகுந்த நன்றிகளை தெரிவிப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com