Wednesday, March 20, 2019

நெடுந்தீவு வைத்தியசாலையில் சேவையாற்ற மருத்துவர்கள் இல்லை

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் சேவையாற்றுவதற்கு மருத்துவர்கள் எவரும் முன்வராமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
வடக்கு மாகாண மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண சுகாதார அமைச்சு கொழும்பு சுகாதார அமைச்சுக்கு கோரிக்கைகளை முன்வைத்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில், விண்ணப்பித்த மாவட்டத்துக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் செய்யப்படும் நிலையில் வருடாந்தம் குறைந்தளவிலான மருத்துவர்கள் வடக்குக்கு நியமிக்கப்படுகின்றனர்.

வகுக்கில் பல வைத்திய சாலைகளில் நிரந்தரமான மருத்துவர்கள் இல்லாத நிலையிலும் சில மருத்துவ மனைகள் இயங்கி வரும் நிலையில், தீவுப் பகுதியான நெடுந்தீல் சேவை புரிவதற்கு மருத்துவர்கள் முன் வருவதில்லை என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதனால் அங்கு மருத்துவ சேவைகளை பெறுவதற்கு மக்கள் அல்லல் படுகின்றனர். இதனிடையே. இந்த மார்ச் மாதம் 141 மருத்துவர்கள் வடக்கில் நியமிக்கப்பட்டனர். அவர்களில் எவரும் நெடுந்தீவுக்கு நியமிக்கப்படவில்லை. ஓய்வுபெற்ற மருத்துவரே தற்போது மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆகவே சம்மத்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் அவத்தன்மை செலுத்த வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுகின்றார்கள்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com