Saturday, March 16, 2019

இலங்கையின் கரையோர பகுதிகளில் அமைக்கப்பட்ட சட்டவிரோத கட்டடங்களுக்கு வந்தது சோதனை

இலங்கையின் கரையோர பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. நாட்டை சூழவுள்ள கரையோரங்களை அண்மித்த பகுதிகளில் சட்டதிட்டங்களை மீறி நிர்மாணிக்கப்பட்ட 1400 கட்டடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

இந்த நிலையில் காலி மற்றும் தெஹிவளை கரையோரங்களை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் இதன்போது, குறிப்பிட்டார்.

எஞ்சியுள்ள கட்டடங்களை அகற்றுவது தொடர்பில் உரியவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரபாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, கரையோரங்களை அண்மித்து சட்ட விரோத குடியேற்றங்கள் காணப்படுகின்றன. குறித்த வீடுகளை அகற்ற இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் கரையோர பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com