Tuesday, March 5, 2019

இலங்கை தொடர்பான முதலாவது ஆலோசனை கூட்டம் இன்று

இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் குழு அறையில் இடம்பெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தை பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் ஏற்பாடு செய்துள்ளன.

இதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் இலங்கை சார்பிலும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மூன்று நாடுகளுமே தற்போதைய நகல் பிரேரணையை தயாரித்திருக்கின்றன.
இன்று பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து தயாரித்த இலங்கை குறித்த பிரேரணையின் நகல்வரைவு தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

விசேடமாக இந்த பிரேரணையில் புதிதாக விடயங்கள் சேர்க்கப்படவேண்டுமா? அல்லது முன்னர் பிரேரணையில் உள்ள விடயங்களை திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டுமா? போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பு நாடுகள் தமது யோசனைகளை முன்வைக்க சந்தர்ப்பம் காணப்படுகின்றன.

இந்த நிலையில் இலங்கை தொடர்பான பிரேரணை குறித்த தமது நிலைப்பாட்டை இலங்கை அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com