Monday, March 18, 2019

கிளிநொச்சியில் நீச்சல் தாடாகத்துடன் கூடிய விளையாட்டு மைதான கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக்கள் கட்டிட தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மாலை
3மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவினர்
கலந்து கொண்டிருந்தவர்கள். இந்தநிலையில் வடமாகாண விளையாட்டுத்தொகுதிகள் கட்டிடத்தினை இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி திறந்து வைத்தார்.

தொடர்ந்து குறித்த விளையாட்டு கட்டிடத்தொகுதியில் உள்ள நீர்ச்சல் தடாகத்தை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் திறந்து வைத்தனர்.

இதன்போது தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, விளையாட்டு அமைச்சு உத்தியோகத்தர்கள் மற்றும் ,விளையாட்டு வீர வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர், துடுப்பட்டத்திற்கான பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல்லும் நாட்டிவைக்கப்பட்டது. குறித்த விளையாட்டு மைதானம் வடமாகாண விளையாட்டு வீர வீராங்கனைககள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த கட்டிட தொகுதிக்கான அடிக்கல் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2011ம் ஆண்டு நாட்டி வைக்கப்பட்டு, பின்னர் வேலைகள் நிறைவடைந்த நிலையில் நீண்ட வருடங்களின் பின்பு நேற்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com