Tuesday, March 19, 2019

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கவில்லை - முதலமைச்சர் இசுறு தேவப் பிரிய

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. உடுகம்பொல பிரதேசத்தில் நிகழ்வொன்றில் பங்கேற்றபோது மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப் பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களும் இன்னும் எட்டப்படவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியன இணைந்து, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேற்பாளரை தெரிவு செய்யும் என்றும் மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப் பிரிய தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com