Thursday, March 7, 2019

மரண தண்டனை நிறைவேற்றத்தில் எந்தவித மாற்றமும் இல்லை - ஜனாதிபதி உறுதி

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று, ஜனாதிபதி உறுதிபட தெரிவித்துவருகின்றார். ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, ஜனாதிபதி இந்த விடயத்தை மீண்டும் தெரிவித்துள்ளார்.

எந்த எதிர்ப்பு வந்தாலும் மரண தண்டனை நிறைவேற்றும் விடயத்தில் மாற்றம் இல்லை. ஐரோப்பியா சங்கத்தினதோ, வேறு நிறுவனங்களினதோ எதிர்ப்புக்கள் வந்தாலும், நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி மேலும் உறுதியளித்தார்.

அதேநேரம் போதை பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் தினம் தனக்கு தெரியும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, சிறையில் இருக்கும் போதைபொருள் வியாபாரிகள் போதைபொருள் விநியோகத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

இதனிடையே கடந்த 1976 ம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றியதன் பின்னர், இற்றைவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com