Sunday, March 10, 2019

சில நாட்களுக்கு அதிகரித்த வெப்பநிலை தொடரும்

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் காரணத்தினால், பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இலங்கையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்ப நிலை அண்மைய நாட்களில் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு எதிர்வரும் மே மாதம் வரையில் நீடிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதிகரித்த வெப்ப நிலை காரணாமாக நாட்டின் முக்கிய நீர்த்த தேக்கங்களில் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளது. அதுமாத்திரமன்றி பயிர் நிலங்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. பொது மக்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். மின்சாரத்தை மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் முடிந்தளவு நீரை அதிகளவில் பருகவேண்டும் என்றும் சுகாதார துறையினர் அறிவுறுத்திவருகின்றார்கள். ஆகவே மக்கள் கிடைக்கின்ற அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பாடுகின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com