Wednesday, March 6, 2019

இராணுவ நினைவு வருடம் பிரகடனம்

இறுதி யுத்தம் நடைபெற்று 10 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு, இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிர்நீத்த, காணாமற்போன மற்றும் அங்கவீனமற்ற இராணுவத்தினருக்குத் தேசத்தின் கௌரவத்தினை செலுத்துவதற்கும் நினைவுகூருவதற்கும் வருட வருடம் இராணுவ நினைவு மாதம் பிரகடனப்படுத்தப்பட்டு, பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இராணுவ வெற்றிக்கு பத்து வருடங்கள் பூர்த்தியையும் இந்த 2019ஆம் ஆண்டில் இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்தி, பரந்தளவிலான வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டலில் ரணவிரு சேவாஅதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்தி அதனுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்டுள்ள முத்தாலாவது இராணுவ கொடி, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஜம்மிக்க லியனகேவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அணிவிக்கப்பட்டது.


இந்தநிகழ்வில், இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, விஜேயதாச ராஜபக்ஷ, மகிந்த அமரவீர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள். மாகாண முதன்மை செயலாளர்கள், முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை பிரதானிகள் பங்குபற்றினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com