Wednesday, March 13, 2019

முன்னாள் கடற்படை தளபதியிடம், தொடர்ந்து ஆறு மணிநேரம் விசாரணை

கடந்த 2008 - 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் குறித்து, அப்போதைய கடற்படை தளபதியாக இருந்த வசந்த கரன்னாகொடவிடம் தற்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம், .கடந்த தினம் வசந்த கரன்னாகொடவிடம் தொடர்ந்து 8 மணிநேரம் விசாரணை நடத்தியதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிடம் 6 மணிநேரம் தீவிர விசாரணைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் விவகாரத்தை காரணம் காட்டி, எந்த நேரத்திலும் தாம் கைது செய்யப்படுவதையோ, அல்லது தடுத்து வைக்கப்படுவதையோ தடை செய்ய உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் பிரகாரம் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்படுவதையோ, அல்லது தடுத்து வைக்கப்படுவதையோ உயர் நீதிமன்றம் தடை செய்தது.

இந்த நிலையில் மேற்படி கடத்தல் சம்பவம் குறித்த விசாரணைகள் நிமித்தம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிடம் இன்று 6 மணிநேரம் தொடர் விசாரணை நடத்தியதாக, குற்ற புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com