Wednesday, March 20, 2019

போதைப்பொருள் தொடர்பிலான நடவடிக்கையில் குறைபாடு

இந்நாட்டின் சட்ட திட்டங்களில் போதைப்பொருள் தொடர்பிலான நடவடிக்கைகளின் போது குறைபாடு தெரிவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து போதைப்பொருளை ஒழிப்பதற்கு அதிகாரிகள் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 31 ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பிலான விழிப்புணர்வு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com