Tuesday, March 12, 2019

கையூட்டல் பெற்ற உப காவல்துறை அதிகாரிக்கு, 4 வருட சிறைத் தண்டனை

கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட உப காவல்துறை அதிகாரிக்கு நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி 20,000 ரூபாவை கையூட்டலாக பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஹவத்த – ஆந்தான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரியே, இவ்வாறு சிறைத்தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் மீது, வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக, குறித்த காவல்துறை உப அதிகாரி, 20,000 ரூபாவை கையூட்டலாக பெற்றுள்ளார்.

எனினும் காவல்துறையினர் கையூட்டல் பெற்றுக்கொண்ட அதிகாரியை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராய்ச்சி உத்தரவு பிறப்பித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com