Monday, March 18, 2019

சட்டத்தரணியாக செயற்படுவதற்கு நாகானந்த கொடிதுவக்குவுக்கு உச்ச நீதிமன்று 3 வருட இடைக்காலத்தடை!

நாகானந்த கொடித்துவக்கு இலங்கையில் ஊழல் அழிக்கப்படவேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருகின்றார். இதன் பொருட்டு பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக தனிநபராக வழக்குகளை தாக்கல் செய்து போராடி வருகின்றார்.

அதேநேரம் அவர் இலங்கையின் நீதித்துறையான ஊழல் நிறைந்தது என்று பொது அரங்கில் விமர்தித்தும் வருகின்றார். சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பான வழக்கொன்றின் வழக்குகளை விசாரணை செய்த உயர் நீதிமன்றில் நீதிபதிகளில் ஒருவரை அவர் மன்றில் நேரடியாக விமர்சித்திருந்தார். இதுவிடயமாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு 3 வருடங்களுக்கு சட்டத்தரணியாக கடைமையாற்ற இடைக்கால தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் நாகானந்த கொடித்துவக்கு தன்மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ள நிலையிலேயே பிரமத நீதியரசர் நளின் பெரேரா, சிசிர டி ஆப்ரு ஆகிய நீதிபதிகளின் இணக்கத்துடன் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தனவினால் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக இருந்த காலத்தில் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவிற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக கடமையாற்றிய விஜித் மலல்கொட முன்னிலையில் சுங்க வழக்கு ஒன்று விசாரணகை்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, விஜித் மலல்கொடவை சங்கடத்திற்கு உள்ளாக்கும் விதமாக தேவையற்ற கருத்துக்களை தெரிவித்தமைக்கு எதிராக சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவிற்கு எதிராக குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் குறித்த வழக்கின் குற்றவாளியாக சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு இனங்காணப்பட்டு அவருக்கு 3 வருடங்களுக்கு சட்டத்தரணியாக கடமையாற்ற நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com