Sunday, March 17, 2019

சிம்பாப்வேயின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட சூறாவளியால் 24 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

சிம்பாப்வேயின் தென்கிழக்கு பகுதியில் திடீரென ஏற்பட்ட சூறாவளியில் குறைந்தது 24 பேர் பலியானதாக அந்த நாட்டு அரச ஊடகம் அறிவித்துள்ளது. அத்துடன் சூறாவளியால் 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிமணிமணி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அனர்த்தத்தின் போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களில் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

மொசாம்பிக்கின் எல்லைப் பகுதியான சிமணிமணி மாவட்டத்தில் சூறாவளியை அடுத்து, வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்ட பயிர்கள் உட்பட பெறுமதிவாய்ந்த பொருட்கள், மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சிம்பாப்வே நாடாளுமன்ற உறுப்பினர் சாக்கோ தெரிவித்துள்ளார்.

இந்த சூறாவளிக்கு ‘இடை’ என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த சூறாவளி, மொசாம்பிக், மலாவி மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளைப் பாதித்துள்ளது.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தில் உலகம் முழுவதிலும் உள்ள 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com