Saturday, March 16, 2019

15 லட்சம் பெறுமதி கஞ்சாவுடன் ஒருவரும், சட்டவிரோத போதைப் பொருளுடன் 1790 பேரும் கைது

ஓமந்தை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 9 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளார்கள். பஸ் பயணி போன்று கஞ்சாவை எடுத்துச் சென்றபோது குறித்த சந்தேக நபர், பொலிஸார் மேற்கொண்ட திடீரென சோதனையின்போது கைதாகியுள்ளார்.

சந்தேகநபரின் பயணப் பொதியை சோதனையிடப்பட்டபோது சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, நேற்று இரவு நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1790 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

குறித்த அனைவரும் சட்டவிரோத மதுபானம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com