Friday, March 29, 2019

வடக்கில் சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 14 பேருக்கு ஜனாதிபதியினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, (29) இன்று, ஜனாதிபதியின் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் உத்தியோகபூர்வமாக நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 23 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் மாவட்ட தலைவர்களுக்கான நியமனத்தின் போது, யாழ் / கிளிநொச்சி மாவட்ட தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் யாழ் மாவட்ட தலைவரும், வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினருமான, பொன்னம்பலம் ஆதவன் மற்றும் திருஞானம் ஞானசீலன் ஆகியோர் காங்கேசன்துறை தொகுதியின் இணை அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயராஜா கிங்ஸ்லிஜெயஜீவ், மாரிமுத்து சீவரட்ணம் ஆகியோர் மானிப்பாய் தொகுதியின் இணை அமைப்பாளராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

செல்வநாயகம் கஜந்தன், சாவகச்சேரி தொகுதி அமைப்பாளராகவும், யாழ் மாநகரசபை உறுப்பினர் பாலசிங்கம் சாந்தரூபன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண தொகுதி அமைப்பாளராக செயற்படுவதற்கு, அமைப்பாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வல்லிபுரம் கணேசமூர்த்தி, குணசேகரம் றஜீகரன், சின்னத்துரை உதயசீலன், மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் தில்லைநாதர் தங்கவேலு, ஆகியோருக்கும் யாழ் மாவட்ட அமைப்பாளர் நியமனம் வழங்கப்பட்டிருந்ததோடு, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கந்தையா வைத்தியநாதன், அவர்களுக்கு யாழ் மாவட்ட அமைப்பாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின், கிளிநொச்சி தேர்தல் தொகுதி அமைப்பாளராக சதாசிவம் இராமநாதன் அவர்களும், பூநகரி பிரதேச சபை உறுப்பினர் ஹஜ் முகமது ஹபீர்,அவர்களும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக நியமனம் பெற்றுள்ளனர்.










0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com