Wednesday, March 13, 2019

தொழில் பெற்றுதருவதாக கூறி, கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட 13வயது சிறுமி கர்ப்பம்

தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து, பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள தோட்ட பகுதி ஒன்றில் வசித்து வந்த 13வயது சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்த நபர், அச்சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கபட்டுள்ளதாக பேலியகொட
பொலிஸார் தெரிவித்தனர்

மேற்படி சந்தேக நபரை, கடந்த திங்கள் கிழமை கொழும்பு அலுத்கடை நீதிமன்றில் முன்னிலைபடுத்திய போது, எதிர்வரும் 25ம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு அலுத்கடை நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த சிறுமியை கொழுப்பில் வேலைக்கு அமர்த்துவதாக கூறி ஏமாற்றிய 40 வயதானவர், அச்சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் அச்சிறுமி, கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டிற்க்கு வந்த சிறுமியின் உடல் நிலை குறித்து சந்தேகம் கொண்ட அவரது தாய், டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது, குறித்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கர்ப்பம் தரித்த 13வயது சிறுமி தற்போது டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவித்த பொகவந்தலாவ பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com