Saturday, March 9, 2019

மன்னாரில் 1000 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் மீட்பு

மன்னார் பேசாலை பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஆயிரம் கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சுமார் ஆயிரத்து 400 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன. இவை பொதிகளாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com