Friday, February 8, 2019

இந்திய அரசாங்கத்தினால் திருத்தப்பட்ட சட்டத்தில் இலங்கை ஏதிலிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்களா?

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஏதிலிகள், இந்திய அரசாங்கத்தினால் திருத்தப்பட்ட சட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த சட்டம் இந்தியா லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போர் மற்றும் பல்வேறு காரணங்களினால் நாட்டில் இருந்து இடம்பெயர்ந்த இலங்கை ஏதிலிகள் சுமார் 1 லட்சம் பேர் அளவில் இந்தியாவில் வசிக்கின்றார்கள். இவர்களில் 3 ல் இரண்டு பகுதியினர் அரசாங்க முகாம்களிலும் ஏனையோர் முகாம்களுக்கு வெளியிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

குறித்த மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தொடர்ந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் புதிய திருத்தப்பட்ட பிரஜைகள் சட்டத்தின் கீழும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இந்திய உள் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் விளக்கம் அளிக்கையில் , இலங்கை ஏதிலிகள் அனைவரும் கடந்த 2011 ஆண்டு டிசம்பர் வெளியிடப்பட்ட நிலையான செயற்பாட்டு நடைமுறையின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com